தமிழக பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை – மாஸ்க் கட்டாயம்!
வரும் மாதங்களில் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலனாக தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மாநில மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, வரும் மாதங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பலனாக தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மக்கள் யாரும் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் அறிவுறுத்திய அவர், பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் டெங்குவை எப்படி ஒழித்தோமோ, அதேபோல் கொரோனாவை ஒழிக்க செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.