ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!
அன்னயோஜனா திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் மாதம் தோறும் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகள்:
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாநிலங்கள் தோறும் உணவு பொருட்களை அரசு மலிவான விலையில் வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைகின்றனர். அரிசி, பருப்பு, எண்ணெய், மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்தும் மிக குறைந்த விலையில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இலவசமாக தானியங்களும் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.
ஜூலை 3, 4ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது இந்த பொருளாதார நெருக்கடியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரண தொகைகளும் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ தானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதேபோல் மே மற்றும் ஜூன் மாதங்களில் தானியங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களிலும் இலவசமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு தானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மத்திய அரசின் அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு மாதம் 1 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அன்னயோஜனா திட்டம் மூலம் சர்க்கரை இலவசமாக வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாநில அரசுகளுக்கு 1 கிலோ சர்க்கரைக்கு 18.50 ரூபாய் மானியமாக வழங்கப்படும் எனவும் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இணைய 23 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.