தமிழகத்திலும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை!!

0
தமிழகத்திலும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் அதிகத்தில் பரவி வரும் நிலையில் தமிழக எல்லையோர பகுதிகளில் தீவிர நடவடிக்கையினை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கு காய்ச்சல்:

கர்நாடக மாநிலத்தில் தற்போது குரங்கு காய்ச்சல் அதிவேகத்தில் பரவி வருகிறது. தற்போதைக்கு மாநிலத்தில் 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குரங்கு காய்ச்சலின் தீவிரம் கருதி தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் நோய் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுக்குள்ளான உண்ணிகளால் கடிக்கப்பட்ட குரங்குகளிலிருந்து இந்த தொற்று மனிதனுக்கு பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

அதாவது, காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரணக் கோளாறு, ரத்தப்போக்கு ஆகியவை குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். இந்நிலையில், சாதாரண தலைவலி, காய்ச்சல், உடல் வலி என்றாலும் உடனடியாக அதற்கான பரிசோதனையை செய்து கொள்ளும்படியும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், பூச்சி கடிகள் எதுவும் ஏற்படாத வண்ணம் முழுமையாக மூடிய ஆடைகளை அணியும் படியும், தமிழக எல்லையோர பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்மாறும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!