TCS, Infosys, Wipro, HCL அள்ளிக் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
TCS, Infosys, Wipro, HCL அள்ளிக் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS, Infosys, Wipro, HCL அள்ளிக் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS, Infosys, Wipro, HCL அள்ளிக் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப (IT) நிறுவனங்களான TCS, இன்போசிஸ், விப்ரோ, HCL ஆகியவை புதிய வேலைவாய்ப்பு விகிதங்களை விட அதிகளவு ராஜினாமாக்களை பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

IT துறை

பொதுவாக தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்து வரும் வேளையில் கொரோனாவுக்கு பிந்தைய கால கட்டங்கள் IT துறைகள் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதுவும் பெரிய, முன்னணி IT நிறுவனங்கள் கூட புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி வருகிறது. ஒரு பக்கத்தில் இந்த வேலைவாய்ப்பு விகிதங்கள் எக்கச்சக்கமாக உயர்ந்து வந்தாலும் இந்நிறுவனங்களின் குறைப்பு விகிதமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!

அந்த வகையில் IT துறையில் அட்ரிஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தொடர்ச்சியாக உயர்ந்து வரும் இந்த அட்ரிஷன் விகிதம் TCS, இன்போசிஸ், விப்ரோ, HCL போன்ற முன்னணி IT நிறுவனங்களுக்கு மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளதால் இவற்றில் முன் இல்லாத வகையில் திறமைக்கான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் நியூ ஜெர்சியை தளமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்த அட்ரிஷன் விகிதங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் இந்த மென்பொருள் நிறுவனத்தின் தொழில்துறை அதிக தேய்மான விகிதத்தை கண்டுள்ளது. குறிப்பாக 12 மாத கால அடிப்படையில், காக்னிசன்ட் நிறுவனம் 33% தேய்மான விகிதத்தை எட்டியுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் 11.9% குறைந்த அட்ரிஷன் விகிதத்தை பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் இன்போசிஸ் நிறுவனம் 20.1%, விப்ரோ நிறுவனம் 20.5%, மற்றும் HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் 15.7% என்ற வீதத்தில் அட்ரிஷன் விகிதத்தை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த தேய்மான பிரச்சனையை சமாளிக்க, காக்னிசண்ட் நிறுவனம் இப்போது தக்கவைத்தல் மற்றும் ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று இந்நிறுவனத்தின் CEO பிரையன் ஜே ஹம்பையர்ஸ் கூறியுள்ளார்.

வங்கியில் நிறைய பணத்தை டெபாசிட் செய்பவர்கள் கவனத்திற்கு – ஆபத்தா? நல்லதா?

தொடர்ந்து உயர்ந்த தேய்மானத்துக்கு மத்தியிலும் காக்னிசண்ட் நிறுவனம் அதன் நிகர பணியாளர் எண்ணிக்கையை தொடர்ச்சியாக 17,000 ஆக அதிகரித்தது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மறுபுறம், நடப்பு நிதியாண்டில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!