பாரதியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கண்ணம்மா? சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது வெண்பாவை சிறைக்கு அனுப்பிய கோவத்தில் கண்ணம்மாவிற்கு பாரதி விவாகரத்து பத்திரம் அனுப்பி விடுகிறார். இதனால் விரக்தியில் கண்ணம்மா தற்கொலை செய்வது கொள்வது போல் காட்சிகள் வர உள்ளது.
கண்ணம்மாவின் முடிவு:
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து கதாநாயகி ரோஷினி வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் புது நடிகை ஒருவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் கதையில் பல மாற்றங்கள் நடக்க உள்ளதாகவும் தெரிகிறது. வெண்பா சிறைக்கு சென்றதற்கு கண்ணம்மா தான் காரணம் என்று பாரதி கோபத்தில் கண்ணம்மாவிற்கு விவாகரத்து பத்திரத்தை அனுப்புகிறார்.
கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்? அவரே அளித்த விளக்கம்!
இதனால் கண்ணம்மா மிகவும் மனம் ஒடிந்து போகிறார். இன்னொரு புறம் பாரதி சௌந்தர்யாவிடம் தான் கண்ணம்மாவை விவாகரத்து செய்யப்போவதாக கூறுகிறார். இதற்கு சௌந்தர்யா வருத்தப்படுவதை பார்த்து, தனக்கு ஹேமா தான் ரொம்ப முக்கியம் என்றும் விவகாரத்தை வாங்கிய பிறகு எங்காவது ஹேமாவுடன் சென்று விடுவதாகவும் கூறி வருத்தப்படுகிறார். கண்ணம்மா இவ்வளவு நாட்கள் தனியாக இருந்து விட்டாள். இனியும் அப்படியே இருக்கட்டும் என்று கூறுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ இயக்குனருடன் சேர்ந்த ஹேமா, லட்சுமி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இன்னொரு புறம் கண்ணம்மா நேராக சௌந்தர்யா வீட்டிற்கு வருகிறார். அப்போது வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். விவாகரத்து பத்திரத்தை நீட்டி, நான் உங்க பையன் பாரதி கூட வாழலாம்ன்னு நெனைச்சேன்.ஆனா இவரு இப்படி செய்வாருன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல என்று முறையிடுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கலக்கமடைகின்றனர். பின்னர், மனவருத்தத்துடன் வீட்டிற்கு வரும் கண்ணம்மா வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது போல் காட்சிகள் வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.