கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்? அவரே அளித்த விளக்கம்!
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது முதன்முறையாக அதை பற்றி காஜல் பேசியுள்ளார்.
காஜல் அகர்வால் கர்ப்பம்:
காஜல் அகர்வால் ஹோ கயா நா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 2004ம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார். பின்னர் 2007 ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு இவர் நடிகர் பரத்திற்கு ஜோடியாக நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. இந்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியை அடையவில்லை. திடீரென்று 2009 ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.
விஜய் டிவியின் முத்தழகு சீரியலில் ‘Mr & Mrs சின்னத்திரை’ பிரபலம் – ரசிகர்கள் ஆர்வம்!
அதன் பிறகு, காஜல் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழில் விஜயுடன் துப்பாக்கி படத்திலும், சூர்யாவுடன் மாற்றான் போன்ற மெகா ஹிட் படத்திலும் நடித்துள்ளார். இதனால் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார். காஜல் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் ஒத்துக்கொண்ட படங்களில் இருந்து விலகினார். இதனால் காஜல் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது.
அதேபோல், நாகர்ஜுனாவின் படத்தில் இருந்து காஜல் விலகியுள்ளார். இதனால் தற்போதும் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. இதனை பற்றி காஜல் இத்தனை நாட்களாக பதில் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் முதன்முறையாக தற்போது கர்ப்பம் என்ற செய்தி குறித்து பதில் அளித்துள்ளார். அதில், தற்போது அதைப்பற்றி பேச விரும்பவில்லை, சரியான நேரத்தில் அதைப் பற்றி பேசுகிறேன். தாய்மையை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம் பதட்டமாகவும் இருக்கிறது. என் தங்கை தாயான போது அவரின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை பார்த்தேன்.
‘பாரதி கண்ணம்மா’ இயக்குனருடன் சேர்ந்த ஹேமா, லட்சுமி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
தாய்மை என்பது அருமையான விஷயம் என நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் தான் நம்மை நாமே அறிகிறோம். என் தங்கையின் குழந்தைகளின் மூலம் நான் ஏற்கனேவே ஒரு தாயை போலவே உணருகிறேன். என் தங்கையின் இரண்டு குழந்தைகள் என் வாழ்வில் வந்த போது இதயத்தில் சொல்ல முடியாத ஒரு மாற்றம் வந்தது. இந்த மாற்றம் என் குழந்தை வரும் போது அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.