பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிப்பு? உச்சநீதிமன்றம் மறுப்பு!
மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகையில் பள்ளிகளை திறக்குமாறு அரசுக்கு ஆணையிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
பள்ளிக்கு வருகை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவிய நிலையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவும் விகிதம் அதிகமாகி வந்தது. அதனை தொடர்ந்து இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இனி ‘இ-சேவை’ மையத்திலேயே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் & திருத்தம்!
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் திருப்தி அளிக்காத நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். நோய்த்தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம் – ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை உத்தரவு!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகைகள் பள்ளிகளை திறக்குமாறு அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகையில் பள்ளிகளை திறக்குமாறு அரசுக்கு ஆணையிட முடியாது என்றும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.