தமிழகத்தில் அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம் – ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை உத்தரவு!
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தெரிவித்திருக்கிறது.
காந்தி ஜெயந்தி:
நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் அடிமை தேசமாக இருந்த இந்தியா, சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று ஏராளமான தலைவர்கள் போராடினர். அவர்களில் முதன்மையானவர் காந்தி. இந்தியாவின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படுபவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அளப்பறிய பங்காற்றியது மட்டுமின்றி அகிம்சை, உண்மை உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளையும் கற்று தந்திருக்கிறார்.
பாலிடெக்னிக் கல்லூரிகள் இன்று முதல் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு அனுமதி!
இந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காந்தியை நினைவு கூறும் வகையில் பல்வேறு கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக இளைஞர் அமைப்புகள் கூடி வீதிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு காந்தியின் கொள்கைகளை பரப்புவர். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நாடகங்களாக நடத்திக் காட்டுவர். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது.
IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – தகுதி, பணியிடம் விளக்கம்!
இருந்த போதிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திறந்த வெளியில் கூட்டம் நடைபெறுவதையும், கொரோனா தடுப்பு விதி பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.