ஜூலை 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு மாநில கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட உத்தரவின் படி, ஹரியானாவில் உள்ள பள்ளிகள் ஜூலை 15 வரை கோடை விடுமுறைக்காக மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
ஹரியானா மாநிலத்தில் ஜூலை 15ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், அவை மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்பட வேண்டும் என்று மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்து உள்ளார். வரவிருக்கும் நாட்களில் மாநிலத்தை தாக்கும் மூன்றாவது கொரோனா அலை குறித்து ஹரியானா அரசு ஆலோசனைக்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறையின் காலத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
ஜூலை 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய டெல்டா பிளஸ் தாக்கம் எதிரொலி!
இந்த முடிவை அறிவித்த ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால், “கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர்களும், குழந்தைகளும் இன்னும் அச்சத்தில் உள்ளனர். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சூழல் இன்னும் சாதகமாக இல்லை. எனவே, பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஜூலை 15 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாவது வாரத்தில் நிலைமை மீண்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அரசு பேருந்து பயண கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
மேலும் 12 ஆம் வகுப்புக்கான முடிவுகள் ஜூலை 25 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பிலிருந்து 30 சதவீத வெயிட்டேஜ், 11 ஆம் வகுப்பிலிருந்து 10 சதவீதம் வெயிட்டேஜ் மற்றும் உள் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக 60 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் என கூறிய அமைச்சர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உட்பட பள்ளிகளின் ஊழியர்கள் மீண்டும் பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என கூறி உள்ளார்.