தமிழகத்தில் அரசு பேருந்து பயண கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து பயண கட்டணம் உயர்த்துவதற்கான திட்டம் இப்போதைக்கு இல்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து பல மாதங்களாக தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அரசு பேருந்து பொதுப்போக்குவரத்து நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்? அரசுக்கு கோரிக்கை!
பேருந்துகளில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் எனவும், 50 சதவிகித இருக்கைகளுடன் அனைத்து பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், தமிழக அரசு சார்பில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கட்டணமில்லாமல் பயணம் செய்வோர் எண்ணிக்கையை கணக்கீடு செய்ய புதிதாக டிக்கெட் வழங்கப்படுகிறது. இலவச பேருந்துகளுக்கு தனி வண்ணம் அடிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய அவர் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் பேருந்து பயண கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அரசு பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.