ஹரியானா மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – CET தேர்வு எதிரொலி!
ஹரியானா மாநிலத்தில் நாளை பொதுவான தகுதி தேர்வு குரூப் C மற்றும் குரூப் D பிரிவு அரசு ஊழியர்களுக்கான நியமனத்திற்கு நடத்தப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
CET தேர்வு:
ஹரியானா மாநிலத்தின் குரூப் C மற்றும் குரூப் D பிரிவு அரசு ஊழியர்களின் நியமனத்திற்காக பொதுவான தகுதி தேர்வு (CET) நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான CET தேர்வு நவம்பர் 5ம் தேதியான நாளை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் மாநிலம் முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருவதை எளிதாகும் விதமாக மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
IBPS PO 2022 ஆன்லைன் மெயின் தேர்வுக்கான அறிவிப்பு – அதிகாரப்பூர்வ வெளியீடு!
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
மேலும், தேர்வர்கள் இறுதி நேர அவசரத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு மையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வர வேண்டும் என்றும், தேர்வுக்கான நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடக்க இருக்கும் CET தேர்வை ஒட்டி ஹரியானா மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மொத்தம் 11 லட்சம் பேர் CET தேர்வை எழுத உள்ள நிலையில், மாநிலத்தின் 22 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.