தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உதவித்தொகை பெற வாய்ப்பு!
தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் முலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்த முழு விபரங்களையும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
அரசு உதவித்தொகை:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அசுர வேகத்தில் அதிகரித்ததாக பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் எஸ்.எஸ்.எல்.சி தோல்வி /எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி /எச்.எஸ்.சி/ பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
அதாவது படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளி மாணவ / மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்ருகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்ரும்.
- குரும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
- மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
- ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.