தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ் – முதன்மை செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கார்டு – வங்கி கணக்கு:
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்த உத்தரவின் பேரில் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது 14,86,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கை துவங்க அறிவுறுத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் வங்கி கணக்கு திறந்தவுடன் ரேஷன் அட்டைதாரர் கணக்கின் விவரங்களை மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் தங்களின் ஆதார் எண்ணை வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 11 புதிய IT பார்க்குகள்.. 2 லட்சம் வேலை வாய்ப்புகள் – SIPCOT ன் புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
இது குறித்து பேசிய கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் 95 சதவீதம் பேர் மட்டுமே வங்கி கணக்கு எண், ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது ரேஷன் கார்டில் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற நிலை தமிழகத்தில் இல்லை என்று கூறியுள்ளார்.