தமிழகத்தில் 11 புதிய IT பார்க்குகள்.. 2 லட்சம் வேலை வாய்ப்புகள் – SIPCOT ன் புதிய திட்டம்!
மாநிலத்தில் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முயற்சித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக புதியதாக 11 IT பார்க்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்:
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம்,சிவகங்கை, காஞ்சிபுரம், தேனி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற 11 முக்கிய நகரங்களில் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் வகையில் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க பிஎம்டபிள்யூ, ரெனால்ட் நிசான், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, அசோக் லேலண்ட் போன்ற முன்னணி கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்களின் திட்டங்களை தமிழகம் கைப்பற்றியுள்ளது.
KV பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்கள் – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
இதேபோல், தற்போது தொடங்க உள்ள புதிய திட்டத்தின் மூலம் இந்த 11 பகுதிகளில் 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும், இதன் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். புதிய தொழில்நுட்ப பூங்காக்களில் பல்வேறு துறைகளையும் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப பூங்கா பற்றிய திட்டத்தின் அறிக்கையினை இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் KPMG நேற்று வெளியிட்டுள்ளது.