தமிழக ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் முக்கிய அதிவேக ரயில் 6 மாதங்களுக்கு சில வழித்தடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
பேருந்துகளை காட்டிலும் ரயில்களில் தான் கட்டண செலவு குறைவு என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும், ரயிலில் கழிப்பறை வசதி இருக்கும் என்பதாலும் பலரும் ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் கூடுதல் வசதிகளை அறிமுகம் செய்தபடி இருந்து வருகிறது. அதிலும், பண்டிகை தினங்களில்
பயணிகளுக்கு கூடுதல் ரயில் சேவைகளும் வழங்கப்படுகிறது.
இதனிடையே, பயணிகளின் வசதிக்காக ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான ஆய்வும் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
அதாவது, மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சென்னை(128686) அதிவிரைவு ரயில் சோதனை முயற்சியாக நாளை முதல் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மங்களூர்- சென்னை(128686) அதிவிரைவு ரயில் நாளை காலை 6.30 மணிக்கு ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்