மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த DA உயர்வு இந்த மாதம் முதல் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DA உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, நாட்டில் பணவீக்கம் உயர்த்துவதை பொறுத்து ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களை போலவே மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி சம்பள உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அகவிலைப்படி உயர்வு தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்த உத்திரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. அதாவது, உத்திரப்பிரதேச மாநில ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை 11% வரைக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வினால் நாட்டிற்கு நிதிச்சுமை கூடினாலும் அதனை சமாளித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பேராசிரியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு – வலுக்கும் கோரிக்கை
அதாவது, இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட நாட்டிற்கு ரூ.625 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மேம்படுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு ஆகஸ்ட் 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படி உயர்வுக்கான பலன் செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு கிடைக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த DA உயர்வினால் கிட்டத்தட்ட 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.