இந்தியாவில் பென்ஷன் பெறுபவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை உயர்த்தினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் என பலரும் பலன் அடைவார்கள் என்று ஒரு சில செய்தி நிறுவனங்கள் கூறிவருகிறது. இந்த நிலையில் தற்போது டி ஏ தொகை உயர்த்தப் பட்டு உள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு டி ஏ அரியர் தொகை போன்றவை மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ராதிகாவும், கோபியும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்ட பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2022 ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது குடும்ப பென்ஷன் தொடர்பான விதிமுறையும் மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சிசிஎஸ் பென்ஷன் 1972 விதி 54(11)ன் படி, கணவன்-மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், இருவரும் இறந்த பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப பென்ஷன் கிடைக்கும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உறுப்பினர்களில் ஒருவர் இறந்தால், மற்ற உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி) குடும்ப பென்ஷன் வழங்கப்படும். ஓய்வுக்குப் பின் இருவரும் இறந்து விட்டால், குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேலும் இது தவிர குழந்தைகளுக்கும் பென்ஷன் திட்டத்தில் சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு பென்ஷன் கிடைக்கிறது.மேலும் இது தவிர புதிய பென்ஷன் விதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அது என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு பென்ஷன் கிடைக்கிறது. இதற்கான விதிமுறையின்படி, கணவன்-மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, அவர்கள் மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதியம் (CCS pension) 1972-இன் கீழ் வருபவர்களாக இருந்தால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் குடும்ப பென்ஷன் பெறுவதற்கான தகுதியைப் பெறுவார்கள். ஓய்வுக்குப் பிறகு இருவரும் இறந்து விட்டால், அவர்களின் குழந்தைகள் இரண்டு பென்சன் தொகை பெறலாம். இந்த இரண்டு ஓய்வூதியத் தொகையும் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.