ராதிகாவும், கோபியும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்ட பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
ராதிகாவும், கோபியும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்ட பாக்கியா - சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவும், கோபியும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்ட பாக்கியா - சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவும், கோபியும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்ட பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!

கோபி தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என ரசிகர்கள் கடுப்பில் இருந்த நேரத்தில் தற்போது ராதிகாவும் கோபியும் ஒன்றாக இருப்பதை பாக்கியா பார்த்து விடுவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியா என்னதான் கோபியை விழுந்து விழுந்து கவனித்தாலும் ராதிகாவை திருமணம் செய்யத்தான் கோபி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். பாக்யாவிற்கு எப்போதுதான் ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற விஷயம் தெரியப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கோடை விடுமுறை குறைப்பு, மே 16 முதல் பள்ளிகள் தொடங்கும் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தற்போது கூட மயூவின் பிறந்தநாளுக்காக ராதிகா பாக்கியாவிடம் சமைக்க சொல்லி ஆர்டர் கொடுத்து இருந்தார். அந்த உணவு சாப்பிட்ட அனைத்து குழந்தைகளும் மயங்கியதால் போலீசார் பாக்கியாவை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். ஆர்டர் கொடுத்ததன் பேரில் ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என போலீசார் ராதிகாவையும் கைது செய்தனர். அப்போது பாக்கியாவிற்கு உதவியாக இல்லாமல் ராதிகாவை மட்டும் காவல் நிலையத்தில் இருந்து கோபி காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

பாக்கியாவை எப்படியாவது காவல் நிலையத்திலிருந்து அழைத்து வர வேண்டும் என குடும்பத்திலுள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றன. ஆனால் கோபி குடும்பத்தில் உள்ளவர்களின் எவரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை. பின்பு, எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து காவல் நிலையத்திலிருந்து வெளியே கூட்டி வருகிறார். பாக்கியா வீட்டிற்கு வந்த பிறகு எதுவுமே நடக்காதது போல கோபி வீட்டிற்கு வருகிறார். குடும்பத்திலுள்ள அனைவருமே கோபியின் மீது கொலை வெறியில் இருக்கின்றனர். பின்பு பாக்கியா கோவிலுக்கு செல்லும்போது கோபியுடன் ராதிகா இருப்பது போல் இருக்கிறது என சந்தேகப்படும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!