கரூர் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை!

0
கரூர் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை!
கரூர் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை!
கரூர் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை!

கரூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு நாளை (மே 25) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள்ளூர் விடுமுறை:

கரூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசத்தி பெற்றது. இங்கு வந்து என்ன வேண்டிக் கொண்டாலும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் கூறுவர். இக்கோயிலில் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய திசை பார்வையுடன் காட்சியளிக்கும் மார் 100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான் தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இந்த கோயிலை அமைத்துள்ளதாக வரலாறு. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

Exams Daily Mobile App Download

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் மத நல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் மதிய பூஜை தீர்த்தத்தை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் நம்பிக்கையோடு வாங்கி செல்வர். ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இத்திருவிழா கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்தாண்டு பாதிப்புகள் குறைந்துள்ளதால் திருவிழா நடைபெற்று வருகிறது.

Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதன் ஒரு பகுதியாக நாளை மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடைபெற உள்ளது. இந்த கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும். மேலும் அம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். பிறகு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!