மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த மாத இறுதியில் (DA) உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த மாத இறுதியில் (DA) உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த மாத இறுதியில் (DA) உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை உயர்த்தினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் என பலரும் பலன் அடைவார்கள் என்று ஒரு சில செய்தி நிறுவனங்கள் கூறிவருகிறது. இந்த நிலையில் தற்போது டி ஏ தொகை உயர்த்தப் பட்டு உள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு டி ஏ அரியர் தொகை போன்றவை மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக பல மாத கால உதவித்தொகை முடக்கத்திற்கு பிறகு, 2021 ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் உயர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அக்டோபர் மாதம் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 3 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகளாக நிறைய சலுகைகள் கிடைக்காமல் தவித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் அடுத்தடுத்து நிறைய சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மீண்டும் மானியம்? சரிபார்க்கும் விவரங்கள் இதோ!

இந்த நிலையில் தற்போது டி ஏ தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து வரவுள்ள முக்கிய பண்டிகையான ஹோலி பண்டிகைக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அதிலும் முக்கியமாக இந்த மாத இறுதிக்குள் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஹோலி பண்டிகை இந்த மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த DA 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. AICPI தரவுகளின்படி, டிசம்பர் 2021 வரை DA 34.04 சதவீதத்தை எட்டியுள்ளது. 3 சதவீத அலவன்ஸுக்குப் பிறகு ரூ.18,000 அடிப்படை ஊதியத்தில் DA ஆண்டுக்கு ரூ.73,440 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!