தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.112.72 கோடி நிவாரணம்! முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.112.72 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி மாத கடைசியிலும், பிப்ரவரி மாத முதல் வாரத்திலும் மழை பெய்தது. பருவம் தவறி பெய்த இந்த மழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், மழையால் 33 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட நெற்பயிருக்கு நிவாரணமாக எக்டேருக்கு ரூ.20000ம், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, திருவாரூர் மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்கள் குறித்து வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிர் செய்யப்பட்ட 33 விழுக்காடு பயிர்கள் மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகமாகும் புதிய கட்டண முறை சிகிச்சை – அமைச்சர் துவக்கம்!
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,33,907 விவசாயிகளுக்கு 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 லட்சம் வழங்க முதல்வர் தற்போது அணையிட்டுள்ளார். இந்த நிவாரணம் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.