தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு :
தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறையாத நிலையில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுதேர்வானது ரத்து செய்யப்பட்டது.
சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு – மின்சார ரயில்கள் ரத்து!
மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் தொடர்ந்து வழக்கம் போல தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துக்களை 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டது.
தமிழக அரசின் ‘தாலிக்கு தங்கம்’ – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
அதன்படி முதல் கட்டமாக மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வும் நடத்தப்படும். அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல்வரின் அனுமதி பெற்று அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.