H1-B விசாதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் | தானியங்கி பணி நீட்டிப்பு! இந்தியர்கள் மகிழ்ச்சி!
அமெரிக்காவில் எச் – 4 விசா பயன்படுத்தி பணிபுரியும் அனைவருக்கும் தானியங்கு நீட்டிப்பு முறைக்கு தடை விதித்து முன்னாள் அதிபர் உத்தரவிட்டார். தற்போது அந்த தடையை நீக்கி தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
எச் – 4 விசாதாரர்கள்:
உலகில் பொருளாதார அடைப்படையில் வல்லரசு நாடுகளில் ஒன்று தான் அமெரிக்கா. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம் பெயர்ந்து மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை பார்க்கும் மக்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெரும்பாலும் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மட்டுமே அதிக அளவில் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் சிறப்பு ரயில்கள் சேவை நிறுத்தம் – ரயில்வே வாரியம் அறிவிப்பு!
அவ்வாறு எச்-1பி விசா வைத்திருக்கும் பணியாளர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணிபுரிய அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு வருபவர்களுக்கு எச் – 4 விசா வழங்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் அங்கு பணிபுரியலாம் என்ற சட்டத்தை முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்தார். இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறி எச்-4 விசாதாரர்களின் தானியங்கி பணி அங்கீகார நீட்டிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!
அதனால் இந்த முறையின் கீழ் பணிபுரிந்த பெரும்பாலான இந்திய பெண்கள் தங்களது வேலையை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட எச்-4 விசாதாரர்கள் சார்பில் அந்நாட்டு நீதிமன்த்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை சார்பில் மீண்டும் தானியங்கி பணி நீட்டிப்பு அங்கீகாரம் வழங்க தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த சட்டத்தால் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.