இந்தியாவில் சிறப்பு ரயில்கள் சேவை நிறுத்தம் – ரயில்வே வாரியம் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 1,700க்கும் மேற்பட்ட ரயில்கள் பழைய படி இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் சேவைகள்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ரயில்வே துறை பெரும் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மழை நீர் தேக்கத்தை தடுக்க வல்லுநர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு!
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. இதனால் பொது மக்களின் வசதிக்காக மீண்டும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கியது. முதலில் முன்களப் பணியாளர்களுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே இதுவரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவைகளை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – சூப்பர் அறிவிப்பு!
அதில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து ரெகுலர் மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களும் MSPC (மெயில்/ எக்ஸ்பிரஸ் சிறப்பு) மற்றும் HSP (விடுமுறை ஸ்பெஷல்) ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் வழக்கமான ரயில் சேவையாக மாற்றப்படுகின்றன. ரயில் கால அட்டவணை 2021 இன் அடிப்படையில் வழக்கமான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும். ரயில் பயணங்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய கட்டணம் மட்டுமே இனிமேல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 1,700க்கும் மேற்பட்ட ரயில்கள் பழைய படி இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.