மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? சமூக, அரசியல் & மத நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள்!

0
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? சமூக, அரசியல் & மத நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள்!
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? சமூக, அரசியல் & மத நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள்!
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? சமூக, அரசியல் & மத நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள்!

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அகமதாபாத், வதோதராவில் விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக குஜராத்தில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவலால் குஜராத்தின் 27 நகரங்களிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கடந்த வாரத்தில் இருந்து அகமதாபாத், வதோதராவில் மட்டும் இக்கட்டுப்பாடுகள் தொடரப்பட்டது. இந்த நிலையில் அகமதாபாத் மற்றும் வதோதராவில் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அதாவது, குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்ததற்கு பின்பாக அகமதாபாத் மற்றும் வதோதராவில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 25 முதல் நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு நகரங்களில் மட்டும் நேற்று (பிப்.24) நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இனி தொடராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று முதல் இந்த இரண்டு நகரங்களிலும் இரவில் நடமாடுவதற்கு எந்தத் தடையும் இருக்காது.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இருப்பினும், சமூக, அரசியல், கலாச்சார மற்றும் மதக் கூட்டங்கள் மற்றும் இது போன்ற செயல்பாடுகளுக்கான சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என்றும் அத்தகைய கூட்டங்களுக்கு 50 சதவீத வரம்பு பின்பற்றப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில், திறந்த பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களுக்கு, அரங்கின் திறனில் 75 சதவீதம் வரை அனுமதிக்கப்படும் என்றும் மக்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புவது தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!