இரவு ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிப்பு – மாநில அரசு உத்தரவு!!
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அங்கு எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் ஒரு மணி நேரத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இரவு ஊரடங்கு:
குஜராத் மாநிலத்தில் புதன்கிழமையான இன்றைய நிலவரப்படி புதிதாக 28 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,24,802 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொற்றினால் புதிதாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரை 10,076 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 8,14,452 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் கோவிட் -19 மீட்பு விகிதம் 98.75% ஆக உள்ளது.
பறவைகளை கூண்டில் அடைக்க கூடாது – விலங்குகள் நல வாரியம் அறிக்கை!
தொடர்ந்து மாநிலத்தில் பாதிப்புகள் குறைந்து வருவதால் அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத், பாவ்நகர், ஜாம்நகர், காந்திநகர் மற்றும் ஜுனகத் ஆகிய எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கில் ஒரு மணி நேரத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. தற்போது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தளர்வுகள்:
இருப்பினும், ஹோட்டல்களும் உணவகங்களும் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஜூலை 31 முதல் திறந்தவெளிகளில் 400 பேருடன் பொது விழாக்கள் அனுமதிக்கப்படும். மூடிய இடங்களில், 50% இருக்கை திறன் கொண்ட செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். காந்திநகரில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலோசனை குழு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி இந்த முடிவுகளை எடுத்துள்ளார் என்று அரசு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.