பறவைகளை கூண்டில் அடைக்க கூடாது – விலங்குகள் நல வாரியம் அறிக்கை!
இனி வரும் காலங்களில் விற்பனைக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பறவைகளை கூண்டில் அடைக்க கூடாது என்று விலங்குகள் நல வாரியம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியம்:
உலகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் பறவைகளை கூண்டுக்குள் வைத்து வளர்க்கும் பழக்கம் உள்ளது. இது பறவைகளின் மேல் பிரியம் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான விஷயமாக உள்ளது. இதனால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் இடங்களிலும் பல வகையான வண்ணங்களில் பறவைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இப்படி பறவைகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்க கூடாது என்று பல முறை நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ளது.
பாரம்பரியம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 வது இடம் – யுனெஸ்கோ அறிவிப்பு!
தற்போது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பல ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இனி வரும் காலங்களில் எந்த பறவைகள் விற்பனைக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் கூண்டுகளில் அடைக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், சுதந்திரமாக பார்ப்பதற்கான உரிமை அனைத்து பறவைகளுக்கும் உள்ளது. விற்பனை உட்பட எந்த தேவைகளுக்காகவும் பறவைகளை கூண்டுகளில் அடைக்க கூடாது என்று நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. பறவைகள் நல ஆர்வலர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், விற்பனையாளர்கள் அனைவரும் இது குறித்து வருத்தத்தில் உள்ளனர்.