தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பட்டாசு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கலைக்கட்டி காணப்படுகிறது. இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு பல்வேறு பட்டாசுகளை தடை செய்துள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தையும் குறைத்துள்ளது. அதனை தொடர்ந்து பட்டாசு வெடிப்பதில் பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா தனம் அண்ணியாக மாறிய காட்சி – வைரலாகும் புகைப்படம்!
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு கடை மற்றும் தொழிற்சாலைகளில் அரசு உரிமம் வழங்கிய பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விதிகளை மீறினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி – வருத்தத்துடன் பேட்டி!
மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கக்கூடிய பேரியம் ரசாயனம் கலந்த வெடிபொருட்களை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதனை மீறுபவர்களுக்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி எச்சரித்துள்ளார்.