தேர்வு இல்லாமல் திண்டுக்கல் GRI பல்கலையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பகுத்து நேர ஆசிரியர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
GRI பல்கலைக்கழகம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் (GRI) அதிக அளவிலான பகுதி நேர ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பை பற்றிய அறிவிப்பை முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, Part-Time Teacher பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியனாவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம்.
அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
தகுதிகள்:
GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Part-Time Teacher பணிகளுக்கு என 7 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.phill, Ph.D., Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கான வயது வரம்பு குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
விண்ணப்பம்:
பல்கலையில் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 26.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Part-Time Teacher பணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள படி, தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 26.11.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணியினை பற்றிய மேலும், அதிக தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.