GRI நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Research Associate, Research Assistant, Field Investigation ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் (30.05.2022) மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
GRI Dindigul வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI Dindigul) காலியாக உள்ள Research Associate பணிக்கு என 01 இடமும், Research Assistant பணிக்கு என 01 இடமும், Field Investigator பணிக்கு என 02 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Cooperation, Cooperative Management பாடப்பிரிவில் MA, M.Com, M.Phil, Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கான வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- Research Associate பணிக்கு ரூ.15,000/-, Research Assistant பணிக்கு ரூ.12,000/- மற்றும் Field Investigators பணிக்கு ரூ.10,000/- மாத ஊதியமாகவும் தரப்படும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
GRI Dindigul விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.