தமிழகத்தில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை வேலைவாய்ப்பு முகாம்!
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.20) அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தற்போது வேலை வாய்ப்பை தேடி வருபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய வண்ணம் உள்ளது. தற்போது மிகப்பெரிய முன்னணி நிறுவனங்கள் மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றது. இதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறியவர்கள், பல நாட்களாக வேலை தேடி வருபவர்கள் நல்ல ஒரு வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அண்மையில் பிரபல நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் குறிப்பாக பெண்களுக்கு வேலை வழங்க பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
TNPSC குரூப் 1 முதல் நிலை தேர்வு – இன்று துவக்கம்.. 3.22 லட்சம் பேர் பங்கேற்பு!
Exams Daily Mobile App Download
இந்த முகாமானது நாளை (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு முகாமானது தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பி.இ பட்டம் பெற்றவர்கள் முதல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் டிகிரி பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என இ.எஸ் கல்விக் குழுமத் தலைவர் தெரிவித்துள்ளார்.