TNPSC குரூப் 1 முதல் நிலை தேர்வு – இன்று துவக்கம்.. 3.22 லட்சம் பேர் பங்கேற்பு!
தமிழகத்தில் துணை ஆட்சியர் , உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1 தேர்வு இன்று (நவ.19) மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1:
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பு ஆய்வாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் குரூப் 1 தேர்வை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தகுதி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த தேர்வானது 2 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அடுத்தாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் முதல் கட்டமான முதல்நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் TNPSC குரூப் 1 தேர்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 3.22 லட்சம் பேர் இன்று இத்தேர்வை எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து முறைகேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மையங்களிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேர்வர்கள் வசதிகாக போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.