Post Office இன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் – வெறும் ரூ.1515 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
Post Office இல் உள்ள சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டங்கள் ரிஸ்க் இல்லாமல் அதிக பாதுகாப்புடன் இருப்பதால் மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்:
மத்திய அரசின் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு இணையாக அதிக பலன்களை அளித்து வருகிறது . உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக அதிக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த வகையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து போஸ்ட் ஆபீஸ் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை 19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்களும் தொடங்கலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தொழிலாளர் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!
இதற்கான பிரீமியம் தொகையை மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் தேர்ந்தெடுத்து செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பிரீமியம் இடையில் கட்ட முடியவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினமும் ரூ.50 சேமித்து மாதம் ரூ.1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு சேமித்து வந்தால் வட்டியுடன் சேர்த்து பாலிசிதாரருக்கு ரூ.34.60 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும். இதனை தொடர்ந்து தேவைப்பட்டால் இடையிலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்! மாநில அரசு முக்கிய உத்தரவு!
இந்த வகையில் பாலிசி வாங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதி மற்றும் வாடிக்கையாளர் பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யும் வசதியும் உள்ளது. இந்த வசதியே இத்திட்டத்தின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மேலும் பாலிசியின் மிகப்பெரிய சலுகையாக போஸ்ட் ஆபீஸ் வழங்கும் போனஸ் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய்க்கு ரூ.65 என போனஸ் ஆகும். இத்திட்டத்தின் மூலம் குறைந்த அளவு முதலீட்டு தொகையில் அதிக அளவு முதிர்வுத் தொகையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.