மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தொழிலாளர் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு செய்வதில் பெரிய மாற்றத்தை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரத்தையும் மாற்றியுள்ளது. இது தொடர்பாக சில தகவல்களை பார்க்கலாம்.
அகவிலைப்படியில் மாற்றம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி தற்போது வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3% உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இனி 34% அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றங்களை அரசு அறிவிக்கிறது. இந்த அகவிலைப்படியின் அளவு அடிப்படை ஊதியத்துடன் தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை பெருக்கினால் அதன் மூலமாக கணக்கிடப்படுகிறது.
வார இறுதி முழு ஊரடங்கு ரத்து? மாநில அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
இந்த அகவிலைப்படியானது அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவை மேம்படுத்துவதற்கு வழங்கப்படுகிறது. இது அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படியை கணக்கீடு செய்வதில் சில மாற்றங்களையும் மற்றும் புதிய சூத்திரத்தையும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. அத்துடன் அகவிலைப்படியின் ஊதிய விகிதக் குறியீட்டின் புதிய தொடரையும் அறிவித்துள்ளது.
TNPSC வேலை வாய்ப்புகள் குறித்த முக்கிய அறிவிப்பு – மாற்றங்களும், நடைமுறை சிக்கல்களும்!
இதற்கு முன்னதாக அடிப்படை ஆண்டு 1963-65 கொண்டு அகவிலைப்படி கணக்கிடப்பட்டது. இதனை தற்போது 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய WRI வரிசையை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஊதிய விகித குறியீடு, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் வரும் மாற்றங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதிய முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு அடிப்படை ஆண்டு மாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக அகவிலைப்படியை கணக்கிடும் முறையிலும் மாற்றம் ஏற்படும்.