தமிழக அரசு கலை கல்லூரிகளில் மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் – இன்று வெளியீடு !
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில் இன்று மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தரவரிசை பட்டியல்:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதியிலிருந்து மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் மே ஒன்பதாம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மே 17ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக மே 22 ஆம் வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
மே 29 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
இதனை தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் ரேங்க் செய்யப்பட்டு இன்று கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எனவும், கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், ஜூன் 22ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.