தமிழகத்தில் ரூ.50,000 மாத ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனம் ஒன்றில் மேலாளர் பணிக்கு முன் அனுபவம் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள பதிவின் மூலம் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மேனேஜர் பதவி:
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நலிவடைந்த நெசவாளர்கள் தங்களின் நெசவு துணிகளை மக்களிடம் விற்பனை செய்கின்றனர். அந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசு நடத்தி வரும் கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி, சென்னை, கடலூர், கோயம்புத்தூர், மதுரை, செலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரூ, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் 11 பணியிடங்கள் உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் சந்தையியல் மேலாளர் ( Marketing Manager) பணிக்கு 1 வருடம் பணி புரிய பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.50,000 ஊதியமாக வழங்கப்படும். இதற்கு சந்தைபடுத்துதல் பாடநெறியில் எம்பிஏ முதுநிலை பட்டமும், பணிக்கு சம்பந்தப்பட்ட ஆடைத்தொழிலில் 5 வருட முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 15.9.2022 தேதியின் படி 33 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் முறையாக கிடைக்கவில்லையா? – அரசின் அதிரடி நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
Marketing Manager பணிக்கு செப்டம்பர் 28ம் தேதியான நாளை கீழ்கண்ட முகவரியில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் நாளை நடக்கும் நேர்முகத்தேர்வில் சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி:
கோ – ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம்,
350, பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை – 600 008.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்