திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் முறையாக கிடைக்கவில்லையா? – அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழக அரசு பொதுமக்களின் நலனிற்காக பல நலத்திட்டங்களை அறிவித்து உள்ளது. இவை குறித்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழக அரசு மக்களின் நலனில் அக்கறை கொண்டும், அவர்களின் வாழ்வை முன்னேற்றும் விதமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. தற்போதைய அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே, அரசின் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்பாக ஏட்டில் மட்டும் இல்லாமல், தகுதியவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதனால் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் நேரடியாக முதல்வரே கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுபோல், அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியானவர்களுக்கு கிடைப்பதற்காக அரசு தற்போது பல்வேறு நிபந்தனைகளை வைத்து உள்ளது. அவை அனைத்தும் முறையாக சோதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மக்கள் தங்களுக்கான பலன்களை அடைய முடிகிறது. இந்நிலையில், தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்காக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், அதேபோல், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திலும் உள்ள கோரிக்கை மனுக்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு தொழிலாளர்துறை அமைச்சர் சி.வி. கணேசன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்