அரசு வேலையில் 65,000 காலிப்பணியிடங்கள் – ஹரியானா பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் வெளியீடு!
ஹரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல்வர் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பட்ஜெட்
ஹரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி அன்று தொடங்கியதை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் இன்று 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினருக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்படும் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இதை மட்டும் செய்யாதீங்க ஆபத்து – பரவும் தகவல்.. IOCL விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
இதே போல், மாநிலத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் புதிதாக 2 பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதே போன்று அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 4,500 லிருந்து 5,300 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தெரிவித்துள்ளதாவது, அரசு பணியிடங்களில் 65,000 வேலைகள் வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மாநிலத்தில் செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.