வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இதை மட்டும் செய்யாதீங்க ஆபத்து – பரவும் தகவல்.. IOCL விளக்கம்!
இந்தியாவில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் வாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்குகளில் முழு கொள்ளவு பெட்ரோலை நிரப்பினால் டேங்க் வெடித்து விடும் என்ற தகவல் பரவி வருகிறது. இது குறித்து தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல்:
இந்தியாவில் மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை காலம் துவங்கவுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் வெப்பம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்களில் பெட்ரோலை முழுமையாக நிரப்ப கூடாது என்றும் அவ்வாறு நிரப்பினால் டேங்க் வெடித்து விடும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Pm Kisan பயனாளிகளுக்கு புதிய வசதி – ரூ.6000 நிதியை Surrender செய்வதற்கான Simple Steps!
Follow our Instagram for more Latest Updates
கடந்த ஆண்டும் இது போன்ற தகவல் ஒன்று வைரலானது. அதாவது வெயில் காலங்களில் பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பும் போது அதிக வெப்பம் காரணமாக பெட்ரோல் வெப்பமடைந்து அதிலுள்ள வாயு வெளியேற முடியாமல் வெடித்து விடும் என்று கூறப்பட்டது. அதே போலவே தற்போது கோடை காலம் நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற தகவல் மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் . மேலும் வாகனங்களில் முழுமையாக பெட்ரோலை நிரப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதாவது டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடும் என்று பரவும் தகவல் முற்றிலும் போலியானது என்று தெரிவித்துள்ளது.