அரசு ஊழியர்கள் இதை செய்தால் ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது – முக்கிய எச்சரிக்கை!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு விடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டதை தொடர்ந்து, 18 மாத நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஓய்வூதியம் பெறுபவதில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இந்த அறிவிப்பில், சிசிஎஸ் விதிகள் 2021 கீழ் உள்ள விதி 8ஐ மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் பணியின்போது அலட்சியமாக செயல்பட்டாலோ அல்லது கவனக்குறைவால் தவறு நேர்ந்தாலோ அவர் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணியின் போது ஊழியர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதாவது தவறு செய்த ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்கு துறையிலிருந்து ஓய்வு பெற்றவராக இருப்பின் அவரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சிஏஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பெற்று வரும் நிலையில், அவர் குற்றம் செயல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவரின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை தற்கலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.