அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!
இந்தியாவின் தலைநகரான டில்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து அரசு ஊழியர்களும் பணிகளின் போது பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு:
டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவடை முடிந்த கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரித்துள்ளனர். அதனால் டில்லியில் காற்று மாசுபாடு ஏற்படத் தொடங்கியது. அதன் பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில் அதிலிருந்து வெளியான புகையினால் மேலும் காற்று மாசுபாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் டில்லியில் கடந்த சில தினங்களாகவே பள்ளி, கல்லூரி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் கோவில்!
இந்நிலையில் டில்லியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த காற்று மாசுபாடானது அதிகரித்து வருகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் டில்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மறுஉத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் அரசு விரைவில் இதனை சரிசெய்யும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நவ.22ம் தேதி 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சகம் முடிவு!
அதனை தொடர்ந்து வரும் 21ம் தேதி வரை 100% அரசுப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணியபுரிய வேண்டும். மேலும் கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் முடிந்த வரையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஒன்றிய அரசுகளுக்கு தனியார் மற்றும் அரசு வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தான ரயில், பேருந்து வசதிகளை பயன்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.