நவ.22ம் தேதி 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சகம் முடிவு!
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில் நவம்பர் 22ம் தேதி 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நான்காம் கட்டமாக திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் முதல் அலை பரவல் கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. முதல் அலை பரவல் சற்று ஓய்ந்து, மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கிய நிலையில் மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை தொற்று பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் சமீபத்தில் கட்டுக்குள் வந்தது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – ஸ்மார்ட்போன் மூலமாக IRCTC டிக்கெட் புக் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
இதனால் பள்ளிகளை திறக்க இலங்கை கல்வித்துறை முடிவு செய்தது. இலங்கையில் பள்ளிக்கல்வியானது 4 நிலைகளை கொண்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர், அடுத்தடுத்த கட்டங்களில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்தபடியாக நான்காம் கட்டமாக வரும் நவம்பர் 22ம் தேதி முதல் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க இலங்கை கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பின் போது கல்வித்துறை தொடர்பான மேலும் சில தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
SBI வங்கியில் டூவீலர் லோன் – மாதம் ரூ.256 EMI, குறைந்த வட்டி விகிதம்! முழு விபரம் இதோ!
முன்னதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதற்காக 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்குவதற்காக புதிய சம்பள கமிஷன் அறிமுகம் செய்யப்படும் என்றும், சம்பள நிர்ணய முறை எளிதாக்கப்படும் என்றும் அரசின் கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.