திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் கோவில்!
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பெய்த தொடர் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 9, 10, 11, 12 ஆகிய தினங்களில் பெய்த கனமழையால் கடலோர மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது. இடைவிடாது பெய்து வரும் அதிக கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் சென்னையில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிறைந்து தண்ணீர் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
நவ.22ம் தேதி 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சகம் முடிவு!
தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் கடந்த 13ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி சென்று கனமழையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் திருப்பதியில் உள்ள ஏர் பை பாஸ் ரோடு, யுனிவர்சிட்டி ரோடு ஆகிய பகுதிகள் உட்பட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – ஸ்மார்ட்போன் மூலமாக IRCTC டிக்கெட் புக் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். புயல் சின்னம் மேலும் வலுவடையும் நிலையில் மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி மலைக்கு பாத யாத்திரை செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.