தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு – பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணகெடுத்து அதை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆசிரியர்கள் கணக்கெடுப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கிய போதும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதனை ஏற்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை செய்து வருகின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வருவதால் முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதனால் சுழற்சி முறையில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்கள் வழங்குதல், பதிவேடுகளை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய ரயில்வே இலவச Wifi சேவைகள் வழங்கும் திட்டம் நிறுத்தம் – அமைச்சர் தகவல்!
அடுத்த கட்டமாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்களை கண்டறியும் நோக்கில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் விகித அடிப்படையில் கணக்கெடுக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அதை விட்டுவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.