இந்திய ரயில்வே இலவச Wifi சேவைகள் வழங்கும் திட்டம் நிறுத்தம் – அமைச்சர் தகவல்!
இந்தியாவில் உள்ள ரயில்களில் இலவச Wifi சேவைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்த மத்திய அரசு தற்போது இத்திட்டத்தை கைவிடுவதாக பாராளுமன்ற அவையில் எழுத்துப்பூர்வமாக பதில் மூலம் தெரிவித்துள்ளது.
இலவச Wifi
இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச Wifi சேவைகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த கால ஆட்சியின் போது துவங்கி வைத்தது. அதாவது ரயில் நிலையங்களுக்கு வரும் மக்கள் சில சமயங்களில் ரயில்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதால் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாகவும், ரயில் நிலையங்களின் பாதுகாப்புகளுக்காகவும் இலவச Wifi சேவைகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது.
தமிழகத்தில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!
இந்நிலையில் ரயில்களில் இணைய இணைப்பை வழங்கும் திட்டத்தை, அதாவது இலவச Wifi வழங்கும் திட்டத்தை இந்திய ரயில்வே கைவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற அவையில் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னா, ‘செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் ஹவுரா ராஜ்தானி விரைவு ரயிலில் வைஃபை அடிப்படையிலான இணைய வசதி வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இத்திட்டத்தின் செயல்திறன் குறைவாக இருக்கிறது. மேலும், பயணிகளுக்கு கிடைக்கும் இணைய அலைவரிசை போதுமானதாக இல்லை. அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது வரை ரயில்களில் வைஃபை அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு பொருத்தமான, செலவு குறைந்த தொழில்நுட்பம் கிடைக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, இலவச வைஃபை வசதி சுமார் 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.