இந்தியா டூ ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயண தடை நீக்கம் – அரசு உத்தரவு!
கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் இந்திய பயணிகள் விமானத்திற்கு பல்வேறு நாட்டு அரசுகள் தடை விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான சேவை:
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. அதனை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த காரணத்தால் பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பயணிகள் வர தடை விதித்தது. அந்த வரிசையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஈவுத்தொகை காலக்கெடு ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு!
இந்நிலையில் கொரோனா பரவல் பல நாடுகளில் கணிசமாக குறைந்து வரும் நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை நாளை முதல் நீக்க முடிவு செய்துள்ளதாக நாட்டின் தேசிய அவசரம் மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த நாடுகளில் இருந்து வந்தால் அதற்கான ஆவணங்களை வைத்திருந்தாலே அனுமதிக்கப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
மேலும் அரபு நாட்டிற்கு பயணம் செய்ய அந்த நாட்டு அரசால் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவம், கல்வி மற்றும் அரசுத்துறை, மருத்துவச் சிகிச்சையை நிறைவு செய்வோர், படிப்பை நிறைவு செய்வோருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதிலிருந்து மனிதநேய அடிப்படையில் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.