HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஈவுத்தொகை காலக்கெடு ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு!
கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான ஈவுத்தொகையை செலுத்துவதற்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தனியார் துறை கடன் வழங்குநரான HDFC வங்கி அறிவித்துள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு
இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகளில் முன்னணி இடத்தை வகிக்கும் HDFC வங்கி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் HDFC வங்கி, அதன் பங்குதாரர்களிடம் இருந்து வரி அறிவிப்புகளை செயலாக்க தேவையான காலக்கெடுவை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை ஈவுத்தொகை செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
TNPSC அரசு பணியாளர்களுக்கான போட்டித்தேர்வு பட்டியல் – விரைவில் வெளியீடு!
HDFC வங்கியின் இயக்குநர் குழு, 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிகர லாபத்தில், ரூ.1 என பங்கிற்கு 6.50 ஈவுத்தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்த தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 2 வரை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதி ஆண்டிற்கு, HDFC வங்கியின் நிகர வட்டி வருமானத்தில் ரூ.64,879 கோடி நிகர லாபமாக ரூ.56.3 என கணக்கிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஜூன் 30, 2021-ல் முடிவடைந்த காலாண்டில், HDFC வங்கியின் நிகர வட்டி வருமானம் ஆண்டுக்கு முந்தைய காலாண்டில் இருந்த ரூ.15,665 கோடியுடன் ஒப்பிடும்போது, 8.6% மட்டுமே உயர்ந்து ரூ .17,009 கோடியாக கணக்கிடப்பட்டது. இதற்கிடையில், அதன் நிகர லாபம் ரூ. 6,659 கோடியாக அதிகரித்தன் மூலம் 74% உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை 11 மணி நிலவரப்படி, HDFC வங்கியின் பங்குகள் 2.21% உயர்ந்து ரூ.1,466.45 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 2.03% உயர்ந்துள்ள அதன் பங்கு முக்கிய குறியீடான நிஃப்டி புள்ளி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.