தமிழக கோவில்களில் தகுதிபெற்ற அர்ச்சகர்களை நியமிக்க அரசு உத்தரவு!
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்து பிரிவுகளிலும் தகுதியான பயிற்சி பெற்றவரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அர்ச்சகர்கள் நியமனம்
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் 1970ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் பரவலாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் முதல் ஊதிய உயர்வு – சண்டிகர் அரசு!
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து சாதியினரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அதன்படி கடந்த மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணையின் கீழ் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது இந்து அறநிலையத்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்து பிரிவுகளிலும் தகுதியான பயிற்சி பெற்றவரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை – அமைச்சர் உறுதி!
அதன்படி மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கு பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு அர்ச்சகராக பயிற்சி அளிக்கப்படுவதாக இந்து அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.