அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் முதல் ஊதிய உயர்வு – சண்டிகர் அரசு!
சண்டிகரில் அரசு நிர்வாக ஊழியர்கள் அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி 20,000 பேருக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு:
சண்டிகர் அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 2016 ஜனவரி 1 முதல் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி, சண்டிகர் அரசு தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்க உள்ளது. இது தொடர்பாக யூனியன் அரசின் பவர்மேன் அசோசியேஷனின் பொதுச் செயலாளர் கோபால் தத் ஜோஷி ஊழியர்களின் நிலுவைத் தொகையை விடுவிப்பதற்கு பஞ்சாப் அரசிடம் நிதி இல்லை என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1, 2016 முதல் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை – அமைச்சர் உறுதி!
சண்டிகர் துணை சேவைகள் கூட்டமைப்பின் தலைவர் பல்விந்தர் சிங், சண்டிகர் அரசு ஊழியர்களுக்கு மிகவும் குறைவான மற்றும் தாமதமான நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஊதிய உயர்வு தொடர்பாக சண்டிகர் அதிகாரி ஒருவர், 2009 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்தாவது பஞ்சாப் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தர ஊதியத்திற்கு ஏற்ப பணியிடங்களின் நிலை தீர்மானிக்கப்படும். ஐந்தாவது ஊதியக்குழு 2006ம் ஆண்டு முதல் பொருந்தும். இதில் கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் பயனடைவார்கள்.
கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்.16 முதல் வகுப்புகள் – அறிவிப்பு வெளியீடு!
கடந்த ஜூலை 5ம் தேதி அரசு திருத்தப்பட்ட ஊதிய விதிகளை அறிவித்தது. அதன்படி ஜனவரி 1, 2016 முதல் செப்டம்பர் 30, 2021 வரை நிலுவைத் தொகை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்களின் பதவியை பொறுத்து மாதம் ரூ.8,000 முதல் 16,000 ரூபாய் வரை ஊதியம். இதனால் தற்போது ₹ 56,038 மாதாந்திர ஊதியம் பெறும் ஒரு ஊழியர் மாதத்திற்கு ₹ 9,454 முதல், 14,910 வரை உயர்வு கிடைக்கும். வருங்கால சம்பள உயர்வு விகிதம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக அடிப்படை ஊதியத்தில் இருந்து 3% அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.