தமிழக அரசு ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழக அரசு ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!

ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வரும் கணினி உதவி பொறியாளர்களின் நிரந்தர பணி நியமனம் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

பணியாளர்கள் நியமனம்

கடந்த 2005 ஆம் ஆண்டு வேலையுறுத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள கணினி உதவி பொறியாளர்கள் மற்றும் ஓவர்சியர் பணியிடங்களுக்கு என்று வேலைவாய்ப்பு துறையின் மூலமாக ஒப்பந்த ஊழியர்களாக பலர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதே போல் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓவர்சியர் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது. ஆனால், கணினி ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்களாக தான் தற்போது வரை பணியாற்றி வருகின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள் – அமைச்சர் அறிவிப்பு!!

அதே போல் இந்த பதவியில் 1000க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், அரசாணை வெளியிடப்பட்டு 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் இந்த பணியாளர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யப்படவில்லை. கொரோனா காலகட்டத்தில் கூட 100 சதவீத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இப்படியாக இருக்க, தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று வேதனை அடைந்துள்ளனர். தங்களுடன் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த ஓவர்சியர்கள் பணி நிரந்தரம் பெற்று அதன் சலுகைகளை அடைந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!